ஜெ., வழக்கு விசாரிக்க நீதிபதிக்கு விருப்பமில்லை

posted in: கோர்ட் | 0

பெங்களூரு:””தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிய மனுவை விசாரிக்க விரும்பவில்லை,” என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிப பச்சாப்புரே தெரிவித்தார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் ஆச்சார்யாவும், ஜெயலலிதா தரப்பில் வக்கீல் நவநீத கிருஷ்ணனும் ஆஜராகினர். விசாரணைக்குப் பின்னர், நீதிபதி பச்சாப்புரே கூறுகையில், “”தனி நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகிய இரண்டையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று நான் தான் தீர்ப்பளித்தேன். ஆனால் தற்போது, இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியல்ல. இது குறித்து, கர்நாடகா மாநிலத் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து, வேறொரு நீதிபதியை வைத்து விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *