மதுரை, ஜன. 22: மார்ச் 2010}ல் நடைபெறவிருக்கும் அரசு மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கு பிப்ரவரி 4 முதல் 18}ம் தேதி வரையிலும், தமிழ், ஆங்கிலம் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுகள் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 18 முடியவும் நடைபெறவிருக்கின்றன.
மேல்நிலைத் தேர்வு எழுதவிருக்கும் தனித் தேர்வர்களுக்குக் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுகள் மற்றும் மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் அடுத்த மாதம் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மேல்நிலை வகுப்பு செய்முறைத் தேர்வுகள் சார்பான கூட்டம் பிப்ரவரி 1}ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி / கள்ளர் / ஆதிதிராவிடர் / உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் கு.ரஜனி ரத்னமாலா தெரிவித்துள்ளார்.
Leave a Reply