மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 4 தொடக்கம்

posted in: கல்வி | 0

மதுரை,​​ ஜன.​ 22:​ மார்ச் 2010}ல் நடைபெறவிருக்கும் அரசு மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மேல்நிலை வகுப்பு மாணவ,​​ மாணவியருக்கு பிப்ரவரி 4 முதல் 18}ம் தேதி வரையிலும்,​​ தமிழ்,​​ ஆங்கிலம் கேட்டல் /​ பேசுதல் திறன் தேர்வுகள் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 18 முடியவும் நடைபெறவிருக்கின்றன.

​ ​ மேல்நிலைத் தேர்வு எழுதவிருக்கும் தனித் தேர்வர்களுக்குக் கேட்டல் /​ பேசுதல் திறன் தேர்வுகள் மற்றும் மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் அடுத்த மாதம் பிப்ரவரி 23,​ 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

​ ​ மேல்நிலை வகுப்பு செய்முறைத் தேர்வுகள் சார்பான கூட்டம் பிப்ரவரி 1}ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை ஓ.சி.பி.எம்.​ ​(பெண்கள்)​ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

​ ​ இந்தக் கூட்டத்தில் அனைத்து வகை அரசு மேல்நிலைப் பள்ளி /​ கள்ளர் /​ ஆதிதிராவிடர் /​ உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் கு.ரஜனி ரத்னமாலா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *