இந்திய ஐ.டி., நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை

8983075புதுடில்லி: பொருளாதார மந்தநிலை தற்போது சீராகி வருகிறது. இதனால், ஊழியர்களின் வேலையை பறித்த ஐ.டி., நிறுவனங்கள், தற்போது வேலைக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளன.

நடப்பு ஆண்டில் சுமார் 1 லட்சம் பேரை வேலைக்கு நியமிக்க உள்ளதாக இந்திய ஐ.டி., நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தங்கள் நிறுவனத்துக்கான ஐ.டி., கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக இந்த நியமனம் செய்யப் பட்டுள்ளது. இதனால், சாப்ட்வேர் கம்பெனிகளுக்கும் பி.பி.ஓ., கம்பெனிகளுக்கும் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.

இதில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்போசிஸ் டி.சி.எஸ்., 30,000 பேரை நியமிக்கப்போவதாக கடந்த ஆண்டிலேயே அறிவித்துவிட்டது. இதுதவிர,

16,000 பேரை புதிதாக நியமிக்கப்போவதாக இன்போசிஸ் கூறியுள்ளது.

இதேபோல, ஜென்பேக்ட் நிறுவனம் 10,000 பேரையும், ஐபிஎம் 5000 பேரையும், அசெஞ்சர் 8,000 பேரையும், எம்பேசிஸ் 2000 பேரையும் நியமிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *