வாஷிங்டன்:திபெத் சுதந்திரம் பெறுவதற்காக நான் செய்து வரும் பிரசாரத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவ வேண்டும் என, புத்த மத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் கோரி புத்த மத தலைவர் தலாய் லாமா, உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்டதும் அவர், 1959ம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தலாய் லாமா, ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சீன மக்களுக்கு எங்களுடைய உண்மையான கோரிக்கை என்னவென்று தெரிய வாய்ப்பில்லை. சீனாவில் கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், தகவல் தொடர்பு சுதந்திரம் ஏதுமில்லை. இந்த தணிக்கை முறை தான் தற்போதுள்ள பிரச்னை.இந்த தகவல் தொடர்பு தணிக்கை முறை உள்ளதால் தான் சீன அரசு, என்னை பிரிவினைவாதி யாகவும், ராட்சதனாகவும் சித்தரித்து வருகிறது. என்னை பார்த்தால் ராட்சதனாகவா தெரிகிறது? இந்த தணிக்கை முறை நீங்கி விட்டால் பிரச்னை இல்லை.இந்த மாற்றம் உருவாக அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும்.
திபெத் தன்னாட்சி பிரசாரத்துக்கு இந்த நாடுகள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும்.கூகுள் இன்டர்நெட் மூலம் சீன விஷயங்கள் வெளியே போகக்கூடாது என்பதால் தான், சீன மொழியில் வெளியாகும் கூகுள் வெப்சைட்டில் பல தகவல்களை சீனா தணிக்கை செய்து வருகிறது.இவ்வாறு தலாய் லாமா கூறினார்.
Leave a Reply