புது தில்லி, பிப். 15: முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கையால் இன்று வரை பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு தொல்லை கொடுப்பவையாக உள்ளன என பாஜக தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
÷ஃபரீத் ஜக்காரியா என்ற பத்திரிகையாளரின் புத்தகத்தை மேற்கோள் காட்டி தனது இணைய தளத்தில் அத்வானி கூறியுள்ளதாவது:
÷1952-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்க அமெரிக்கா முன்வந்தபோது, அந்த வாய்ப்பை சீனாவுக்கு அளிக்குமாறு நேரு வலியுறுத்தினார். ÷இதுவே, அவரது தவறான வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம்.
÷ஆனால், நம்பிக்கை துரோகம் இழைத்த சீனா 1962-ல் நம் நாட்டின் மீது படையெடுத்தது. ÷நாட்டுக்கு வலுவான படைத் தளபதி தேவை என மெüன்ட்பேட்டன் வலியுறுத்தியபோது, அதை நேரு நிராகரித்தார். மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதில் மட்டுமே நேரு ஆர்வம் காட்டினார். ராணுவ வலிமையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவேயில்லை.
÷ஆனால், அவரது மகள் இந்திரா காந்தி வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருந்தார். அவரது காலத்தில்தான் வங்கதேசம் உருவானது குறிப்பிடத்தக்கது என அத்வானி கூறியுள்ளார்.
Leave a Reply