புதுடில்லி: மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கும் சேவையை சி.பி.எஸ்.இ., இலவசமாக வழங்குகிறது.
மாணவர்கள், பெற்றோரது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக, நாடுமுழுவதிலும் செயல்பட்டு வரும் 52 கவுன்சிலர்களை இனி ஒரே இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுவரை ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு தொலைபேசி எண் வழங்கப்பட்டிருந்த நிலையில், 1800 11 7002 என்ற டோல் ப்ரி எண் வசதியை சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எண்ணில் கல்வி, தேர்வு தொடர்பான பொதுவான தகவல்கள் வழங்கப்படுகின்ற போதிலும், மாணவர்களின் தேவையைப் பொறுத்து மனரீதியான ஆலோசனைகளும் வழங்க இணைப்பு கொடுக்கப்படுகிறது.
இச்சேவை வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் நடைமுறையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 52 பள்ளி முதல்வர்கள், பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர்.
Leave a Reply