மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் பாரதிதாசன் பல்கலை. முதலிடம்

posted in: கல்வி | 0

திருச்சி,​ பிப்.19: ​ ​ ​ தேசிய அளவில் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்துவதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அதன் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ. ​ ​

​ ​ திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் தொழில்நுட்பத் துறை,​ நூலகம்,​ தகவல் அறிவியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்னணு வளங்களால் உயர் கல்வியில் ஏற்படும் பிரச்னைகள்,​ முன்னேற்றங்கள்,​ வாய்ப்புகள்,​ சவால்கள் பற்றிய இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியது:

​ “இணையவழி கல்வி என்பது கணினி வளர்ச்சியால் ஏற்பட்டது. தற்போதுள்ள மாணவர்களும்,​ ஆராய்ச்சியாளர்களும் மின்னணு வழியாக தகவல்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

​ மின்னணு நூலகத்தில் தகவல்களைப் பெறுவதில்,​ தேசிய அளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்தாமிடத்திலும்,​ மாநிலத்தில் முதலிடத்திலும் உள்ளனர்.

​ ​ பல்கலைக்கழகத்தில் 10,000 மின்னணு புத்தகங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ச்சியாளர்களும்,​ மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார் பொன்னவைக்கோ.​ ​ மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.ஜி. தல்வார் பேசியது:

​ ​ “நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே உதவும். இதை உணர்ந்து மாணவர்கள்,​ இளைஞர்கள் பயன்படுத்துவதற்காக நம் நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள்,​ கல்லூரிகளில் மின்னணு நூலகமும்,​ மின்னணு வழியாகத் தகவல்களைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.​ ​ முக்கியமான கட்டுரைகளை மட்டுமல்லாமல்,​ அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவர்களை ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மின்னணு நூலங்கள்தான் முன்னிலை பெறும்’ என்றார் தல்வார்.

​ ​ ​ அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஜி.ஏ.ஐ.ஏ. கற்றல் மைய நிறுவனர் ரோட் ஹெம்செல் சிறப்புரையாற்றினார்.​ ​ கல்வியியல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எஸ். தேவநாதன் விளக்கவுரையாற்றினார்.

​ ​ முன்னதாக,​ கருத்தரங்கச் செயலர் எஸ். சீனிவாச ராகவன் வரவேற்றார். அமைப்புச் செயலர் இ. ராமகணேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *