பகுதி நேர பி.இ.​ படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் ​ 26:​ பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.​ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5}ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

பாலிடெக்னிக் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று,​​ 2 ஆண்டு பணி அனுபவம் இருப்பவர்கள் இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வித் துறை கூறியிருப்பது:

2010}11 ஆண்டில் பகுதி நேர பி.இ.,​​ பி.டெக்.,​​ பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.​ பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று,​​ 2 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணிகளில் இருப்பவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம்.

அதற்கான விண்ணப்பங்கள்,​​ சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம்,​​ கோவை,​​ சேலம்,​​ திருநெல்வேலி,​​ காரைக்குடி,​​ வேலூர்,​​ பர்கூர் ஆகிய இடங்களில் அரசு பொறியில் கல்லூரிகள்,​​ கோவை பி.எஸ்.ஜி.​ பொறியியல் கல்லூரி,​​ கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,​​ மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ஏப்ரல் 5}ம் தேதி முதல் ஏப்ரல் 26}ம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ​(எஸ்.சி.,​​ எஸ்.டி.​ பிரிவினருக்கு ரூ.150).

கட்டணத்தை “செயலர்,​​ பகுதிநேர பி.இ.​ மாணவர் சேர்க்கை,​​ கோவை’ என்ற பெயரில் கோவையில் செல்லத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.​ விண்ணப்பங்களை தபால் மூலமாகவும் பெறலாம்.​ விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு ஏப்ரல் 26}ம் தேதி கடைசி நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *