புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் தற்போது லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர்.
தற்போது லோக்சபாவில் அதிகளவு பெண் எம்.பி.,க்களை காங்கிரஸ் கட்சி கொண்டு முன்னிலை வகிக்கிறது. இக்கட்சியில் தற்போது 23 பெண் எம்.பி.,க்கள் பதவியில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, பா.ஜ.க., 13 பெண் எம்.பி.,க்களை கொண்டுள்ளது.
சமாஜ்வாடி, திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தலா நான்கு பெண் எம்.பி.,க்களை கொண்டுள்ளது. இதை தவிர ஐக்கிய ஜனதா தளம், சிரோண்மணி அகாலி தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா இரு பெண் எம்.பி.,க்களை கைவசம் வைத்துள்ளன. இவர்களை தவிர தெலுங்கானா ராஷ்டிரிய சமதி, ராஷ்டிரிய லோக் தளம், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க., ஆகியவை தலா ஒரு பெண் எம்.பி.,யை கொண்டுள்ளன. தற்போதுள்ள லோக்சபாவில் உத்தரபிரதேசத்தில் இருந்து தான் அதிகபட்சமாக 13 பெண் எம்.பி.,க்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply