ஒசாமா பின்லாடன் பேஸ்புக் பக்கம் நீக்கம் ; அமெரிக்க நிறுவனம் அதிரடி முடிவு

posted in: உலகம் | 0

tbltopnews1_10341608525நியூயார்க்: உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் அக்கவுன்டை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்டெர்நெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வரும் பேக்ஸ்புக்கில் நாள்தோறும் பலர் தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்தனர்: இதன் மூலம் இதில் தங்களை சேர்த்துக்கொண்டவர்கள் தங்களது நண்பர்கள் வட்டாரங்களை பெருக்கி கொள்ளவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில் ஒசாமா பின்லாடன் பெயரிலான பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவாக சேர்ந்துள்ளனர். பலர் தங்களது மத ரீதியான கோட்பாட்டையும், பயங்கரவாதம் தூண்டும் விதமாகவும் வாசகங்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

பிரின்ஸ் ஆப் முஜாகிதீன் என்றும் ஒசாமாவை வர்ணித்துள்ளனர். இவர் மலை பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்குவைதா மற்றும் அல்சகாப் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகளும் இதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆடியோ கேசட்டுகளும் இருக்கின்றன.

பேஸ் புக் செய்தி தொடர்பாளர் பேட்டி : இதனை அறிந்த பேஸ்புக் நிறுவனம் இந்த அக்கவுன்டை அழிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ நாய்ஸ் இது குறித்து கூறியதாவது: பேஸ்புக்கில் மக்கள் சிலர் போலியான பெயர்கொண்டதை பதிவு செய்கின்றனர். இவர்கள் புகழ்பெற்ற அல்லது வேறு மாற்று நபர்கள் பெயரிலோ பதிவு செய்கின்றனர்.

ஒசாமா பின்லாடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இருந்தாலும் ஒசாமா பின்லாடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *