கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் திருமணம்: சான்றிதழை வெளியிட்டார் ஆயிஷா

posted in: உலகம் | 0

கராச்சி, ஏப். 2: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் தனக்கு திருமணம் நடந்துள்ளதற்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்.


÷இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
÷இந்நிலையில் 2002-ம் ஆண்டில் தன்னை மாலிக் ஏற்கெனவே திருமணம் செய்துள்ளதாக கூறிய ஆயிஷா, தற்போது திருமணச் சான்றிதழை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். இந்த சான்றிதழ், பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இதில் அவர்கள் இருவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
÷இது குறித்து ஹைதராபாதில் இருந்து அந்த தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ஆயிஷா, “என்னை மாலிக் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டார் என்பதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கவே திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளேன். நான் அதிக எடையுடன் இருந்ததால் மாலிக் என்மீது வெறுப்பாக இருந்தார்’ என்றார். மாலிக்கை சானியா திருமணம் செய்து கொண்டால் அவரது இரண்டாவது மனைவியாகத்தான் இருப்பார் என்று ஆயிஷாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *