டிஎன்​பிஎஸ்சி தேர்வு:​ நுழை​வுச் சீட்டு கிடைக்​கா​த​வர்​கள் டிஆர்​ஓ​வி​டம் அனு​ம​திச் சீட்டு பெற​லாம்

posted in: மற்றவை | 0

கிருஷ்​ண​கிரி,​​ ஏப்.8: கிருஷ்​ண​கிரி மாவட்​டத்​தில் டிஎன்​பிஎஸ்சி குருப்-​2 எழுத்​துத் தேர்​வுக்​கான நுழை​வுச் சீட்டு கிடைக்​கா​த​வர்​கள் மாவட்ட வரு​வாய் அலு​வ​லரை சந்​தித்து அனு​ம​திச் சீட்டு பெற்று தேர்​வெ​ழு​த​லாம் என மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் பி.பிர​பா​கர் தெரி​வித்​துள்​ளார்.​

இது ​கு​றித்து அவர் வெளி​யிட்ட செய்​திக்​கு​றிப்பு:​ தமிழ்​நாடு அரசு பணி​யா​ளர் தேர்வு வாரி​யத்​தின் மூலம் ஒருங்​கி​ணைந்த சார்​நிலை பணிக்​கான தொகுதி-​1 ​(குருப் 2) எழுத்​துத் தேர்வு வரும் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற உள்​ளது.​ இத்​தேர்​வில் கிருஷ்​ண​கிரி மாவட்​டத்​தில் 5,934 பேர் பங்​கேற்​கின்​ற​னர்.​

இத்​தேர்​ வுக்​கான நுழை​வுச் சீட்டு கிடைக்​கப் பெறா​த​வர்​கள் கிருஷ்​ண​கிரி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​லக வளா​கத்​தில் உள்ள மாவட்ட வரு​வாய் அலு​வ​ல​கத்​தில் அனு​ம​திச் சீட்டை பெற்​றுக் கொள்​ள​லாம்.​ அவ்​வாறு வரும்​போது மார்​ப​ளவு புகைப்​ப​டம் மற்​றும் தேர்​வுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்ப நகல்​களை நேரில் கொண்டு வர​வேண்​டும் என அவர் தெரி​வித்​துள்​ளார்.​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *