பிளஸ் 2 இயற்பியல் பாடத்திற்கான விடைத்தாள் கட்டு காணாமல் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ-மாணவிகள் மறுதேர்வு எழுதினர்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி பிளஸ்2 இயற்பியல் தேர்வு தமிழகம் முழுவதும் பல மையங்களில் நடந்தது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களின் விடைத்தாள் கட்டு காணாமல் போய்விட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த 262 மாணவ- மாணவிகளுக்கு மட்டும் ஏப்ரல் 22ஆம் தேதி அதே பள்ளியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் இன்று காலை 10 மணிக்கு மறுதேர்வு தொடங்கியது.
அந்த பள்ளி மாணவர்களுடன் (பதிவு எண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 தவிர) அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் (பதிவு எண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர), தண்டலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் (பதிவு எண் 469968 முதல் 470052 வரை (470045 நீங்கலாக) ஆக மொத்தம் 262 பேர் தேர்வு எழுதினார்கள்.
Source & Thanks : webdunia.com
Leave a Reply