சென்னை, மே 27: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்சி., (கணினி அறிவியல்), எம்.எஸ்சி., (தகவல் தொழில்நுட்பம்), எம்.எஸ்சி., (மின்னணு ஊடகம்) ஆகிய மூன்று 5 ஆண்டு ஒருங்கிணைந்த சுயநிதி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்புகளில் 2010-11-ம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் தேர்வு மையத்தில் தற்போது வழங்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.600, (எஸ்.சி., எஸ்.சி., (அருந்ததியர்), எஸ்.டி. ஆகியோருக்கு ரூ.300). தவிர, விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கட்டணத்தை “இயக்குநர் (மாணவர் சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. மூலம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 2-ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலே சொன்ன படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துக் கொள்ள, மேலே குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிடலாம். தவிர, 044-22358265 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply