நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம்: முதல்​வர் கரு​ணா​நிதி

posted in: அரசியல் | 0

10mkசென்னை,​​ மே 16: ​ இளை​ஞர்​கள் நம்​பிக்​கை​யோடு உழைத்​தால் வெற்றி நிச்​ச​யம் என்று முதல்​வர் கரு​ணா​நிதி கூறி​னார்.​

​ உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்டு மைய நோக்​கப் பாடல் குறுந்​த​கடு வெளி​யீட்டு விழா சென்னை பல்​க​லைக்​க​ழ​கத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​

​ தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி குறுந்​த​கட்டை வெளி​யிட,​​ அதை இசைக் கலை​ஞர் எல்.​ சுப்​பி​ர​ம​ணி​யன் பெற்​றுக் கொண்​டார்.​

​ விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி பேசி​யது:​

​ ரஹ்​மா​னு​டைய இசையை நான் எழு​திய வார்த்​தை​க​ளோடு குழைத்து நீங்​க​ளெல்​லாம் பரு​கக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்​துள்​ளது.​ நான் எழு​திய பாடல் தான்.​

ஆனால்,​​ தமி​ழ​கத்​தி​னு​டைய புல​வர்​கள்,​​ சங்க காலத்து பெரு​மக்​கள்,​​ சங்க காலத்​திற்​குப் பின்​னர் வந்த கடைச் சங்க காலம்,​​ இடைச் சங்க காலம் எனப் பல்​வேறு காலக் கட்​டங்​க​ளில் வாழ்ந்த ​ கம்​பர்,​​ காள​மே​கம் காலம் வரை​யில் எழு​தப்​பட்ட கவி​தை​களை,​​ அறி​வு​ரை​களை,​​ கொள்​கை​களை,​​ பண்​பாட்​டினை,​​ தமி​ழர்​க​ளு​டைய பழக்க வழக்​கங்​களை எல்​லாம் ஒரு பாட்​டில் அமைத்து,​​ அதை எழு​து​வது எவ்​வ​ளவு பெரிய இடர்​பாடு கொண்​டது என்​பதை நன்கு அறி​வேன்.​ ​

​ பாடலை எழு​தும் போது அரு​கில் இருந்​த​வர்​கள்,​​ இந்​தப் பாடல் வெற்​றி​க​ர​மான பாட​லாக வர வேண்​டும் என்று ஒரு பிரார்த்​த​னை​யோடு எதிர்​பார்த்​தார்​கள்.​ இந்​தப் பாடலை எழு​தும் போது ஏற்​பட்ட உணர்வை நான் மட்​டுமே அறி​வேன்.​ ​

​ எனது வாழ்​நா​ளில் 10,​ 12 ஆண்​டு​க​ளைத் தவிர்த்து மீதி​யுள்ள ஆண்​டு​கள் எல்​லாம் தமிழ்,​​ தமிழ் என்​று​தான் என் உத​டு​கள் உச்​ச​ரித்​தி​ருக்​கின்​றன.​

அத​னால் யார் ஒரு​வர் தமிழ் என்று சொன்​னா​லும் திரும்​பிப் பார்ப்​பேன்,​​ ஒன்​றிக் கலந்​தி​டு​வேன்,​​ உணர்​வு​களை மதிப்​பேன்,​​ அதனை மதிக்​கின்​ற​வர்​கள் எங்​கி​ருந்​தா​லும் அவர்​களை வாழ்த்​து​வேன்.​ ​

​ தரணி வாழ் கலை​ஞர்​க​ளின் இத​யங்​க​ளில் குடி​கொண்​டி​ருக்​கும் நம் வீட்​டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்​மா​னுக்கு கிடைத்த பெரு​மை​தான் ஆஸ்​கார் விரு​து​கள்.​ ​

​ ரஹ்​மானை போன்ற இளை​ஞர்​கள் எப்​படி முன்​னே​றி​னார்​கள் என்​ப​தைச் சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும்.​ அப்​ப​டிச் செய்​தால் ஒவ்​வொரு இளை​ஞ​னும் முன்​னேற முடி​யும் என்ற நம்​பிக்​கை​யைப் பெற முடி​யும்.​

ஏனெ ​னில்,​​ நம்​பிக்கை தான் வாழ்​வின் முதல் படி.​ அதில் கால் வைத்​து​விட்​டால் வெற்றி நிச்​ச​யம்.​

​ நம்​பிக்​கை​யோடு நான் செலுத்​திய உழைப்​பு​தான் எனது முன்​னேற்​றத்​துக்​குக் கார​ணம்.​ ​ அதே போல்,​​ ரஹ்​மான் உல​கப் புகழ் பெறு​வ​தற்கு அவ​ரது நம்​பிக்கை,​​ இடை​வி​டாத முயற்​சி​தான்.​

இது யாரோ ஒரு சில​ருக்கு மட்​டும் அல்ல.​ சமு​தா​யத்​தில் உள்ள எல்லா இளை​ஞர்​க​ளுக்​கும் ஒரு உந்​துச் சக்​தியை ஏற்​ப​டுத்​தக் கூடி​யது.​ ​ ​

​ இந்த பாடல்,​​ பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும் என்று தொடங்​கு​கி​றது.​ எல்லா உயிர்​க​ளும் பிறப்​பால் ஒன்​று​தான்.​ பிறப்பு எல்லா உயிர்​க​ளுக்​கும் ஒன்​றே​தான் என்​ப​து​தான் அதற்கு பொருள்.​

பிறந்த பின் என்ன என்​பது தான் இன்​றைக்கு உள்ள பிரச்னை.​ பிறந்த பின் எல்​லோ​ரும் ஒரே குலம்,​​ ஒரே இனம் என்ற உணர்​வைப் பெற வேண்​டும்.​ எல்​லா​ரும் ஒரே இனம் என்ற முத்​தி​ரை​யு​டன் வாழ வேண்​டும் என்ற வகை​யில் இந்​தப் பாடல் அமைந்​தி​ருக்​கி​றது.​ ​

​ கோவை மாநாடே இந்​தப் பாட​லு​டன்​தான் ஆரம்​ப​மா​கும்.​ இந்​தப் பாடல் விளம்​ப​ரத்​துக்கு பயன்​ப​டுத்​தப்​ப​டும்.​ நானே விளம்​ப​ர​மாக இருந்து ஒவ்​வொ​ரு​வ​ரை​யும் மாநாட்​டுக்கு அழைக்​கின்​றேன் என்​றார் கரு​ணா​நிதி.​

அமைச்​சர்​கள் க.​ அன்​ப​ழ​கன்,​​ பரிதி இளம்​வ​ழுதி,​​ தலை​மைச் செய​லர் கே.எஸ்.ஸ்ரீபதி,​​ பாட​கர் டி.எம்.செüந்​த​ர​ரா​ஜன்,​​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் பீட்​டர் அல்​போன்ஸ்,​​ திரைப்​பட இயக்​கு​நர் கெüதம் மேனன் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​ற​னர்.​

செம்​மொழி மாநாட்​டில் ​27 நாடு​க​ளில் இருந்து 205 அறி​ஞர்​கள் பங்​கேற்பு விழா​வில் முதல்​வர் கரு​ணா​நிதி பேசு​கை​யில்,​​ கோவை மாநாட்​டில் இலங்​கை​யில் இருந்து 53 அறி​ஞர்​கள்,​​ சிங்​கப்​பூர் 37,​ ​ மலே​சியா 29,​ அமெ​ரிக்கா 22,​ கனடா 14,​ இங்​கி​லாந்து 9,​ ஆஸ்​தி​ரே​லியா 6,​ பிரான்ஸ் 5,​ ஜெர்​மனி 5,​ மொரி​ஷி​யஸ் 4,​ பக்​ரைன் 2,​ ஜப்​பான் 2,​ நெதர்​லாந்து 2,​ செüதி அரே​பியா 2,​ சீனா,​​ செக் குடி​ய​ரசு,​​ ஹாங்​காங்,​​ இத்தாலி,​​ நியூ​சி​லாந்து,​​ ஓமன்,​​ போலந்து,​​ ரஷ்யா,​​ செர்​பியா,​​ தென்​னாப்​பி​ரிக்கா,​​ தென்​கொ​ரியா,​​ ஸ்வீ​டன்,​​ ஐக்​கிய அரபு நாடு​க​ளில் இருந்து தலா ஒரு அறி​ஞர் என 27 நாடு​க​ளில் இருந்து 205 அறி​ஞர்​கள் பங்​கேற்​க​வுள்​ள​னர் என்​றார்.​ ​

ஒரே டேக்​கில் கரு​ணா​நிதி

6 நிமி​டங்​கள் ஒடக் கூடிய மாநாட்​டுப் பாட​லில் சித்​தன்​ன​வா​சல் வண்ண ஒவி​யங்​கள்,​​ ​ தஞ்சை பெரிய கோயி​லின் கோபு​ரம்,​​ கும​ரி​யின் திரு​வள்​ளு​வர் சிலை,​​ ​ கடற்​க​ரை​கள்,​​ மாமல்​ல​பு​ரம் கற்​கோ​யில்,​​ திரு​ம​ண​மான தம்​ப​தியை வீட்​டுக்​குள் வர​வேற்​பது,​​ மழ​லைச் சிறு​வர்​க​ளின் பள்ளி பாடம் கற்​றல்,​​ பழ​மை​யான கல்​வெட்​டு​கள் ​ உள்​ளிட்ட பாரம்​ப​ரிய நினை​வுச் சின்​னங்​கள் பட​மாக்​கப்​பட்​டுள்​ளன.​

​இந்​தப் பாடல் காட்​சி​யில்,​​ 30 பாட​கர்​க​ளும் தோன்​றிப் பாடு​வது போல் பட​மாக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ​ ​ ​

​ “பத்​தா​வது படத்தை இயக்க உள்ள நிலை​யில் இந்த செம்​மொழி மாநாட்​டுப் பாடலை இயக்​கி​யுள்​ளேன்.​ ​ டி.எம்.சௌந்​த​ரா​ஜன் முதல் ஸ்ரு​தி​ஹா​சன் வரை மூன்று தலை​மு​றை​க​ளைச் சேர்ந்​த​வர்ளை பாட வைத்​த​தற்கு ரஹ்​மான்​தான் கார​ணம்.​ ​ இந்த பாட​லில் முதல்​வர் கரு​ணா​நி​திக்​கும் ஸ்டார்ட்,​​ கேமிரா,​​ ஆக்​ஷன் சொல்​லி​விட்​டேன்.​ ​ ​ சினி​மா​வில் ஒன் டேக் ஆக்​டர்ஸ் நிறைய பேர் இருக்​கி​றார்​கள்.​ ​ ஸ்டார்ட்,​​ கேமிரா,​​ ஆக்​ஷன் என்​ற​தும் அவ​ரும் ஒரே டேக்​கில் நடித்து முடித்து விட்​டார்’ என குறிப்​பிட்​டார் மாநாட்​டுப் பாடலை இயக்​கி​யுள்ள கௌ​தம் மேனன்.​ ​​

மாநாட் ​டுப் பாடலை முதல் முறை திரை​யிட்ட பின்,​​ அரங்​கில் இருந்​த​வர்​கள் ஒன்ஸ் மோர் கேட்க இரண்​டா​வது முறை​யும் பாடல் திரை​யி​டப்​பட்​டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *