திருநெல்வேலி : நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த, கனிமொழி எம்.பி.,முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தியது போல, தனியார் வேலைவாய்ப்பு சந்தையை, நெல்லை மாவட்டத்திலும் நடத்த, கனிமொழி எம்.பி., ஏற்பாடு மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து நெல்லை மாவட்ட தி.மு.க., செயலர் கருப்பசாமி பாண்டியன் கூறியதாவது: நெல்லையில் ஜூலை மாதத்தில், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக கனிமொழி எம்.பி., நெல்லை மாவட்ட அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் ஒரு பிரிவு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்ப கல்வி கற்றவர்கள் ஒரு பிரிவு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் என, மூன்று பிரிவாக இளைஞர்களை தேர்வு செய்யும் பணி, ஜூனில், நெல்லை மாவட்டத்தின், பத்து சட்டசபை தொகுதிகளிலும் நடக்கிறது. இதற்காக தி.மு.க., கட்சி சார்பற்ற தனியார் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.அப்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டும் ஜூலையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதில் ஒரு லட்சம் பேரை பங்கேற்க செய்ய முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
Leave a Reply