பிரபாகரன் கொல்லப்பட்ட நாள் மே 18-ல் வெற்றி ஊர்வலம்: கோத்தபய

posted in: உலகம் | 0

srilankகொழும்பு, மே 2: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 18-ம் தேதி கொழும்பில் வெற்றி ஊர்வலம் நடத்தப்படும் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.

÷ஆனையிறவில் போர் ஹீரோக்கள் நினைவுச் சின்னத்தை திறந்துவைத்தபின், செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

÷அதற்கு முன்னதாக ஒரு வாரத்துக்கு போர் ஹீரோக்கள் வாரம் கொண்டாடப்படும். இதில் வீரர்களின் பெற்றோர்கள், மனைவிகள், குழந்தைகள், உறவினர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

÷இந்த ஆண்டு மட்டும் வெற்றி ஊர்வலம் மே 20-ல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

÷விடுதலைப் புலிகளுடனான போரில், கடந்த ஆண்டு மே 18-ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *