பெளர்மணி-அமாவாசையில் அதிகரிக்கும் சுறா தாக்குதல்

posted in: மற்றவை | 0

29-shark-attack200மியாமி: பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் தாக்குதலில் 5ல் ஒன்று மத்திய புளோரிடாவில் தான் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தான் அதிகளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நாட்களில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் மீன்களின் இனப்பெருக்க நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் சுறாக்கள் உண்ணும் மீன்களின் நடமாட்டத்துக்கும் சுறாக்களின் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏன் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்ற என்றால், அமெரிக்காவில் அது கோடை காலம் என்பதால், அந்த மாதத்தில் கடற்கரையில் அதிக மக்கள் கூடுவதே காரணம் என்கிறது ஆய்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *