ரிசர்வ் வங்கி தமிழகத்தில் 8 கிராமங்களை தத்தெடுத்தது

5890881நாகப்பட்டினம்: தமிழகத்தில் பின் தங்கிய 8 கிராமங்களை ரிசர்வ் வங்கி தத்தெடுத்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் பவள விழாவை முன்னிட்டு, இந்த நடவடக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் வடகுடி கிராமமும் ஒன்று. இந்த கிராம வளர்ச்சிக்காக ரூ.2 கோடி வழங்கப்படவுள்ளது. இதன் முதல்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் கிராமத்திலுள்ள 360 குடும்பங்கள் சுய தொழில் தொடங்க செய்ய முதல் கட்டமாக ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முனியநாதன் இதை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *