திரிபோலி: லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 105 பேரும் பலியாயினர்.
லிபியாவின் அஃப்ரிகியா ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகானஸ்பர்க்கில் இருந்து லிபிய தலைநகர் திரிபோலிக்கு வந்தது.
அந் நாட்டு நேரப்படி காலை 6 மணிக்கு திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விழுந்து நொறுங்கியது.
விமானிகள், சிப்பந்திகள் 11 பேர் உள்பட அதிலிருந்த 105 பேரும் பலியாயினர்.
Leave a Reply