இனி அதிக வெளிநாட்டு மக்கள் வேண்டாம்: ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிப்பு

posted in: உலகம் | 0

thumb_27610மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார். முந்தைய பிரதமர் கெவின் ருத்தின் குடியேற்ற விதிமுறைகளில் இவர் மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜூலியா குறிப்பிடுகையில், ” ஆஸ்திரேலியாவில் தற்போதைய ஜனத்தொகை 2 கோடியே 20 லட்சம். வரும் 2050ம் ஆண்டுக்குள் மூன்றரை அல்லது நான்கு கோடி அளவுக்கு ஜனத்தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடியேற்ற விதிகளை தளர்த்தி வெளிநாட்டினரை குடியேறச் செய்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை அதிகரிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆஸ்திரேலியாவின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் குடியேற்ற நடைமுறை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

குறிப்பாக தொழில் திறன் பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடை ஏதும் இல்லை. மெல்போர்ன் நகரில் ஏற்கனவே 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். சிட்னியில் ஜனத்தொகை 75 லட்சத்தை தாண்டி விட்டது. போதிய வசதியில்லாமல் குடியேற்ற விதிமுறையை தளர்த்துவது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது’என்றார்.கடந்த ஆண்டு இந்தியா,பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த 3 லட்சம் பேர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *