சென்னை : “”அ.தி.மு.க., பிரமுகர்கள் இன்னும் பலர், விரைவில் தி.மு.க.,வில் சேர உள்ளனர்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.பி., சேகர் இல்ல திருமண விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடந்தது. மணமக்களை வாழ்த்தி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசியலில் முகவரி இழந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் இடமாக தி.மு.க., திகழ்கிறது. தமிழகத்தின் ஒரு பிரதான கட்சியின் கூடாரம் காலியாகி கொண்டே வருகிறது. அக்கட்சியிலிருந்து மேலும் பலர் விரைவில் தி.மு.க.,வில் இணைய உள்ளனர். “சஸ்பென்ஸ்’ கருதி, இதுகுறித்து தற்போதைக்கு விவரங்கள் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். தி.மு.க., தேர்தல் பணிச்செயலர் சேடபட்டி முத்தையா பேசும்போது, “”நெல்லுக்கு நீர்ப்பாய்ச்சுவதாக நினைத்து புல்லுக்கு பாய்ச்சி, ஏமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன். தமிழக அரசியல் வரலாற்றிலேயே, தம்மை தூற்றியவர்களையும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பெருந்தன்மையுடன் கருணாநிதி செயல்படுகிறார்,” என்றார்.
Leave a Reply