புதுடில்லி : ‘ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை 4.47 சதவீதமாக குறையும்’ என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசுக்கு, 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ஏற்கனவே 67 ஆயிரத்து 719 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அகண்ட அலைவரிசை ஒயர்லெஸ் சேவை ஸ்பெக்ட்ரம் மூலம் தற்போது 38 ஆயிரத்து 617 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதனால், 2010-11ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.47 சதவீதமாக குறையும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பிறபகுதியில், அரசு கடன் வாங்குவதும் குறையும். அகண்ட அலைவரிசை ஒயர்லெஸ் சேவை ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முடிவுக்கு வந்தது. ஏலம் எடுத்தவர்கள் 10 நாட்களுக்குள் பணத்தை செலுத்தி விடுவர்.இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.
Leave a Reply