போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமி ழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இந்தியா அரசு 1000 கோடி ரூபாவை (இந்திய மதிப்பில்) வழங்கச் சம்மதித்துள்ளது.
அந்தத் தொகை இலங்கை அரசின் ஊடாக வழங்கப்படாமல் இடம் பெயர்ந்தவர்களின் தனி வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படவுள்ளது. இவ்வாறு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றுக்காலை கோபாலபுரத்திலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்புக் குறித்தும் இந்தியா இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
முதல்வருடனான சந்திப்பின் பின்னர் அவர் தெரிவித்தவை வருமாறு
இதன்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரதி ஒன்று தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
இந்திய அரசால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வழங்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் 13 ஆயிரம் வீடுகள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதற்காக 1000 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்படும்.
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்தியா வழங்கவுள்ள நிதித் தொகை, இலங்கை அரசின் ஊடாக வழங்கப்பட மாட்டாது.
அத்துடன், தமிழர் மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 80 கோடி அமெரிக்க டொலர்களையும் இந்தியா கடனாக வழங்கவுள்ளது.
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக 1000 கோடி ரூபா வழங்கப்படவுள்ள நிலையில், அந்தத் தொகை இலங்கை அரசின் ஊடாக வழங்காமல் இடம்பெயர்ந்தவர்களின் தனி வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடப்படவுள்ளது.
இப்படி சிதம்பரம் தெரிவித்தார்.
Leave a Reply