சென்னை: பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை, ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 607 பேர் எழுதினர். இதில், ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 251 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 1,356 பேர் தோல்வியடைந்தனர். இவர்களில், ஒரு பாடத்தில் 57 ஆயிரத்து 348 பேர், இரு பாடங்களில் 25 ஆயிரத்து 331 பேர், மூன்று பாடங்களில் 11 ஆயிரத்து 266 பேர் என, 93 ஆயிரத்து 945 பேர் மூன்று பாடங்களில் தோல்வியடைந்தனர்.
இவர்களுடன், தனித்தேர்வு மாணவர்களும் சேர்த்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், உடனடித் தேர்வை எழுதியுள்ளனர். இதன் முடிவுகள், நாளை (ஜூலை 31ம் தேதி) வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ‘இறுதிக்கட்டப் பணிகள் முடியாததால், முடிவுகள் வெளியாவது இரண்டு நாள் தள்ளிப் போகலாம்; வரும் 2ம் தேதி தான், முடிவுகள் வெளியாகும்’ என, ‘டேட்டா சென்டர்’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்வெழுதிய மாணவர்கள், எந்த தேதியில் முடிவுகள் வெளிவரும் என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
Leave a Reply