நடப்பு நிதியாண்டில் 8.5% வளர்ச்சியை எட்டினால் சந்தோஷம்-பிரணாப்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை நமது நாட்டின் பொருளாதாரம் எட்டினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இருப்பினும் எட்டரை சதவீத வளர்ச்சி வந்தால் கூட மகிழ்ச்சிதான் என்று பிரணாப் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், சர்வதேச நிதியம் சொல்வதை முழுமையாக நம்ப முடியாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.4 முதல் 9.5 சதவீதமாக இருக்கும் என அது கூறியுள்ளது. ஆனால் எட்டரை சதவீத வளர்ச்சியை நாம் எட்ட முடியும் என நான் கருதுகிறேன். அது கிடைத்தால் கூட மகிழ்ச்சிதான் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *