சென்னை:”சில அரசியல் சூதாடிகள், சமூக விரோதிகளை தூண்டிவிட்டு, என் பெயரில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:என் பெயரால் ஒரு திட்டத்தை அறிவித்து, அதன்படி மகளிரிடம் அணுகி, ஒவ்வொருவருக்கும் 35 ஆயிரம் ரூபாய் கடனாகக் கிடைக்கும். அதில், 5,000 ரூபாய் மானியமாக தரப்படும். மாதந்தோறும், 500 ரூபாய் கட்டினால் போதும் என, தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின்படி ஒழுங்காக பணம் செலுத்துபவர்களுக்கு கடைசியாக விஜயகாந்த் ஒரு குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வார் என, தெரிவித்துள்ளனர்.சில அரசியல் சூதாடிகள், சமூக விரோதிகளை தூண்டிவிட்டு இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர் என, சந்தேகிக்கிறேன். போலீசார் நடு நிலைமையோடு இதை விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக எனக்கு கிடைத்த ஒரு சில விண்ணப்பங்களை போலீசாருக்கு அனுப்பி முறைப்படி நடவடிக்கை எடுத்து வருகிறேன்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
Leave a Reply