நிலவில் பயன்படுத்தக் கூடிய அளவு நிறைய தண்ணீர் உள்ளது-நாசா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: பயன்படுத்தக் கூடிய அளவிலான தண்ணீர் நிலவில் நிறைய உள்ளது. தனக்கென தனி நீர் கட்டமைப்பையும் நிலவு கொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

சந்திரயான் விண்கலத்தின் உதவியால் கடந்த ஆண்டு சந்திரனில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது நாசா. அதன் பின்னர் அதுதொடர்பான ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. தற்போது நிலவில் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு தண்ணீர் நிறைய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசாவின் எல்சிஆர்ஓஎஸ்எஸ் என்று அழைக்கப்படும் லூனார் கிரேட்டர் அப்சர்வேஷன் அன்ட் சென்சிங் சாட்டிலைட் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், நிலவின் தரைப் ப குதியில், நிறைய தண்ணீர் உள்ளது. அது பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. தனக்கென தனி நீர் கட்டமைப்பையும் நிலவு கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு கணிக்கப்பட்டதை விட அதிக அளவிலான நீராதாரம் நிலவில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சில இடங்களில் இந்த தண்ணீர் ஐஸ் கட்டி வடிவில் காணப்படுகிறது. மிகவும் தூய்மையானதாக அது உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *