புதிதாக 800 பேரை பணியமர்த்துகிறது கோர்லாஜிக்

ஐதராபாத் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் பைனான்சியல் இன்பர்மேசன், புராபர்டி மற்றும் அனாலிடிக்ஸ் ‌சொல்யூசன்ஸ் சேவை வழங்கும் நிறுவனமான கோர்லாஜிக் நிறவனம், இன்னும் 6 மாதங்களுக்குள் புதிதாக 800 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோர்லாஜிக் குளோபல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி அனூப் ஹெட்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்தியாவில், தங்கள் நிறுவனத்திற்கு ஐதராபாத், பெங்களூரு மற்றும் மங்களூருவில் அலுவலகங்கள் இருப்பதாகவும், 1,200 பேர் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், இன்னும் 6 மாதங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை 1,200 லிருந்து 2 ஆயிரமாக உயர்த்த திட்டமி்ட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தங்கள் ‌நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்தும் நிகழ்வில் ஒருபகுதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மார்டேஜ் துறையில் கான்டிரிபியூட்டரி மற்றும் புரோபரீட்டரி டேட்டா வழங்குவதிலும் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் வால்யூவேசன் சேவைகளை வழங்குவதிலும் இந்திய ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *