மதுரை : எல்.ஐ.சி.,சார்பில் மதுரையில் நடந்த ‘சமுதாய பாதுகாப்பு மாத’ நிறைவு விழாவில், 17 ஆயிரத்து 99 பேருக்கு கல்வி உதவித்தொகை 1.03 கோடி ரூபாயை கலெக்டர் காமராஜ் வழங்கினார்.
பென்ஷன் மற்றும் குழு காப்பீடு முதுநிலை கிளை மேலாளர் மீனாட்சிநாதன் வரவேற்றார். கோட்ட முதுநிலை மேலாளர் சக்ரபாணி துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: ‘ஜனஸ்ரீ பீமா யோஜனா’ சமுதாய பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகை 30 ஆயிμத்து 946 மாணவர்களுக்கு 1 கோடியே 85 லட்சம், உரிமத்தொகை 667 பேருக்கு 2 கோடியே 12 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. குழு காப்பீட்டு துறை, நடப்பு ஆண்டு பிரீமிய வருவாய் இலக்கான 20 ஆயிμம் கோடி
ரூபாயை அக்.,30 ல் அடைந்துவிட்டது என்றார். கலெக்டர் காமராஜ்,” ஆம் ஆத்மி பீம யோஜனா” திட்டம் மூலம் 1 கோடியே 48 லட்சம் நிலமற்ற ஏழைகள் பயனடைந்துள்ளனர்,” என்றார். அவர், 17 ஆயிரத்து 99 பேருக்கு கல்வி உதவித்தொகை 1.03 கோடி, இறப்பு உரிம தொகை 364 பேருக்கு 1.2 கோடி ரூபாய் வழங்கினார்.
Leave a Reply