ஐ.நா.,வில் இடம் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உளவுத் துறை அசட்டை: அமெரிக்கா கோபம்

/>ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கு, சட்டத்தில் தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்’ என்ற தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், எம்.பி., கஸ் பிலிரகிஸ் என்பவர் கொண்டு வந்த தீர்மானத்தில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது: உலக அமைதி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக இந்தியா பாடுபடுகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான அங்கு, அனைத்து அரசியல் விமர்சனங்களும் சுதந்திரமாக வெளியிடப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன. அதனால், ஐ.நா.,வில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, அதன் சட்டத்தில் 23வது பிரிவில் தேவையான திருத்தங்களை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என, பிரதிநிதிகள் சபை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.