மும்பை : மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), 19 ஆயிரத்திற்கு கீழிறங்கி, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டுவதற்கு வசதியாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம், மத்திய அரசு கடனுதவி வழங்கி வருகிறது. இதில்,எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை ஓரளவு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி வருகின்றன. வீட்டுக் கடன் வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பல நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் நாயர் மற்றும் பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட எட்டு பேரை சி.பி.ஐ., கைது செய்தது. இதன் எதிரொலி, மும்பை பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு பெருமளவு குறைந்தது. இன்று காலையில், சிறிது ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ், காலை 10.37 மணியளவில் 328 புள்ளிகள் குறைந்து 19 ஆயிரத்தை விட கீழிறங்கி 18,989 என்ற அளவில் வந்தது.இதனால், முதலீட்டாளர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். இது 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவு என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply