புதுடில்லி : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்
என, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்; வழக்கு தொடர்பான மொழி பெயர்ப்பில் தவறுகள் நடந்துள்ளன என, ஜெயலலிதா தரப்பில், கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு அனுமதி கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவரங்கள் சரியான மொழிபெயர்ப்பு ஆகாது என்பதால் விசாரணையை நிறுத்தி வைக்க அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மொழிப்பெயர்பு தவறுகள் நிகழாமல் இருக்க, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற, தகுந்த அலுவலரை நியமித்துக் கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட கோர்ட்டிற்கு அறிவுறுத்தினர்.
Leave a Reply