சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ. 38 லட்சத்திற்கு வேலை தரும் பேஸ்புக்

சென்னை: சென்னை ஐஐடியில் தொடங்கியுள்ள கேம்பஸ் இன்டர்வியூவில் பேஸ்புக் நிறுவனம் ரூ. 38 லட்சத்திற்கு வேலை என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி சென்னையின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் பாபு கூறுகையில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஐஐடி சென்னையில், கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் 1ம் தேதி தொடங்கியுள்ளது.

பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. இருப்பினும் பேஸ்புக் நிறுவனம்தான் அதிகபட்சமாக ரூ. 38 லட்சம் சம்பளத்தை அறிவித்து முன்னணியில் உள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 260 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இது 300ஐத் தாண்டும் என்று தெரிகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *