நக்கீரன் இணையாசிரியர் காமராஜ்-பாதிரியார் ஜெகத் காஸ்பர் வீடுகளிலும் சிபிஐ ரெய்ட்

posted in: மற்றவை | 0

டெல்லி: தமிழகத்தில் மட்டும் மொத்தம் 27 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடந்து வருகிறது. ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் உள்ள ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரிமணியம், பெசன்ட் நகரில் உள்ள நக்கீரன் வார இதழின் இணையாசிரியர் காமராஜ், பிரபல மத போதகர் ஜெகத் காஸ்பர், ராஜாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் சென்னை வீடு உள்ளிட்டவை ரெய்டுக்குள்ளாகியுள்ளன.

இதில் காமராஜ், ராஜாவின் நண்பர் என்பதால் சோதனை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ராஜா எம்.பியாக உள்ள நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டியிலும் ரெய்டுநடந்து வருகிறது.

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் உறவினர்கள் வீடுகளும் ரெய்டுக்குள்ளாகியுள்ளன.

பெரம்பலூர் அருகே உள்ள ராஜாவின் வீடு 2வது முறையாக சோதனைக்குள்ளாகியுள்ளது.

பெரம்பலூரில் உள்ள சாதிக் பாட்ஷாவின் நண்பர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட100க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *