பிரிட்டன், புலிகளின் முன்னால் மண்டியிட்டாலும், மஹிந்த அடிபணிய மாட்டார்: மேர்வின் சில்வா

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னிலையில் பிரித்தானியா மண்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அரசாங்கம் நரியைப் போன்று செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறாம் பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் இலங்கையை ஐக்கியப்படுத்திய தலைவராக தாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், இங்கிலாந்து அரசாங்கமும் மேற்கொண்ட சதித் திட்டம் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூழ்ச்சித் திட்டங்களுக்கு அடி பணிந்து செயற்பட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கம் மிலேச்சத்தனத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் இடமாக மாறியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *