மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் பல விமானங்கள்-ஏர் இந்தியா

துபாய்: வளைகுடா நாடுகளிலிருந்து, டெல்லி வழியாக தென் கிழக்கு ஆசியா, காத்மாண்டு, இலங்கை, சார்க் நாடுகள் மற்றும் நியூயார்க்குக்கு அதிக விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க பிராந்திய மேலாளரான அபய் பதக் கூறுகையில், டெல்லியை மையமாக வைத்து இந்த பகுதிகளில் அதிக விமானங்களை இயக்க தீர்மானித்துள்ளோம். இந்த விமானங்கள் அனைத்தும் வளைகுடா நாடுகளிலிருந்து இயக்கப்படும். இந்தியா வழியாக இவை இயங்கும்.

மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற பல்வேறு வசதிகளை வழங்குவதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அதி நவீன தொழில்நுட்பங்கள், வசதிகளுடன் கூடிய விமானங்களையும் வாடிக்கையாளர்களுக்காக இயக்கவுள்ளோம் என்றார் பதக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *