தூத்துக்குடி:””தூத்துக்குடி துறைமுகத்தில், 2012ல், 50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப் பட் டுள்ளது,” என, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று அவர் கூறிய தாவது:இத்துறைமுக சரக்கு கையாளும் குழும தொழிலாளர்கள், துறைமுக தொழிலாளர்களாக மாற்றப் பட்டுள் ளனர். இதற்கான ஒப்புதலை மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. இதுகுறித்த அரசாணையை, கப்பல் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.இதன் மூலம்,இந்த தொழிலாளர்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், தற்போது இங்கு பணிபுரியும் 993 தொழிலாளர் களும், ஓய்வு பெற்ற 972 தொழிலாளர்களும் பணப்பயன் உள்ளிட்டவற்றை பெறுவர். இத் துறைமுகம் இந்த நிதியாண்டில் இது வரை 20 மில்லியன் டன் சரக்கு,4 லட்சம் டி.யு.எஸ்., சரக்கு பெட்டகம் கையாண்டுள்ளது. விரைவில், 25 மில்லி யன் டன் சரக்கு கையாள திட்டமிடப்பட்டு உள்ளது. 2012ல், 50 மில்லியன் டன், 2020ல் 100 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,இத்துறைமுகம் தென்தமிழகத்தின் ஒளிவிளக்காக திக ழும்.கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள வல்லார் படத்தில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் திறக் கப்பட்டுள்ளது. இதனால்,தூத்துக்குடி துறைமுகத்திற்கு முக்கியத்துவம் குறைந்துபோய்விடும் எனக்கூறு வதில் உண்மையில்லை. தமிழகத்தின் மத்திய, தென் பகுதி சரக்குகள் இதுவரை தூத்துக்குடி கொண்டுவரப்பட்டு, கொழும்பு அனுப்பி, அங்கிருந்து பெரிய கப்பலில் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.இனி, தூத்துக்கு டியில் இருந்து வல்லார்படம் துறைமுகம் மூலம், அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பலாம்.இதன்மூலம் நேரம், போக்குவரத்து செலவு மிச்சமாகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சரக்குகளை நேரடி யாக வல்லார்படம் கொண்டு செல்லலாம்.தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உறுதியான பல நடவடிக்கை களை மத்திய கப்பல்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. 538 கோடி ரூபாயில், துறைமுக ஆழம், 10.7 மீட்டரில் இருந்து, 12.8 மீட்டராக அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம், 75 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல் இங்கே வரமுடியும். 49.30 கோடி ரூபாயில் வடக்கு சரக்கு தளம் -1, 332 கோடி ரூபாயில் வடக்கு சரக்கு தளம் -2 அமைப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன.மேலும், 775 கோடி ரூபாயில் வடக்கு சரக்குதளம் 3,4 அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இதற்கான பணிகள் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 145 கோடி ரூபாயில் சிமென்ட், கட்டுமானப் பொருட்களுக்கான 2 தளங்கள் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர, 4,350 கோடி ரூபாயில் வெளித்துறைமுகம் விரிவாக்கப்பணிகள் நடக்கவுள் ளன.இதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம். இந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளும் முடிந்த பின், இத்துறைமுகத்தில் 2019- 2020ல் சரக்கு கையாளும் திறன் தற்போதை விட மூன்று மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு வாசன் கூறினார். துறைமுக தலைவர் சுப்பையா, அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Leave a Reply