தொகுதிப் பங்கீடு பேச்சு-திமுக குழுவில் ஸ்டாலின், பாலு, ஆற்காடு, துரைமுருகன், பொன்முடி

posted in: அரசியல் | 0

சென்னை: காங்கிரஸ் உள்பட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதி பேச்சு நடத்தினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் 80 இடங்கள் கோரப்பட்டது. இல்லாவிட்டால் 60 இடங்களும் ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று காங்கிரஸ் நிபந்தனை போட்டார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.

இதை திமுக தரப்பு ஏற்க மறுத்தது. காங்கிரசுக்கு 50 இடங்கள் தரவே தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. ஆனாலும் காங்கிரஸ் பிடிவாதம் 70 இடங்கள் வரை தருவதாகவும், அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச இரு கட்சிகளும் குழு அமைத்துப் பேச்சு நடத்தலாம் என இரு தரப்பும் முடிவு செய்தன.
இந் நிலையில்
துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவை முதல்வர் கருணாநிதி இன்று அமைத்துள்ளார்.

இந்தக் குழு காங்கிரஸ் உள்பட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தும். இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *