சென்னை : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில் இணைந்து 7 சீட்களை வாங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் தனியரசு, இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்க உடன்பாடாகியது. இதற்கான ஒப்பந்தத்தி்ல ஜெயலலிதாவும், தனியரசுவும் கையெழுத்திட்டனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள பலம் வாய்ந்த இரு அமைப்புகளில் கொங்கு இளைஞர் பேரவையும் ஒன்று. இன்னொரு அமைப்பான கொமுக, திமுகவுக்குப் போய் விட்ட நிலையில், இளைஞர் பேரவை, அதிமுக கூட்டணியில் இணைந்து ஒரு சீட் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply