ஆப்கானிஸ்தானில் உள்ள நங்லாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அங்குள்ள மலைப்பகுதியில் விறகு வெட்டி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.
விறகு வெட்டி கொண்டிருந்த மாணவர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது குண்டுகளை வீசினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் 9 மாணவர்கள் பலியானார்கள். ஒரு மாணவர் மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இறந்த அனைவரும் 9 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கூட்டுப்படை மன்னிப்பு கேட்டு உள்ளது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படை குண்டு வீச்சில் பொதுமக்கள் அடிக்கடி பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply