ஓட்டளிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்ய “பட்டன்’ வசதி கேட்டு மனு தாக்கல்

posted in: கோர்ட் | 0

சென்னை : மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்வதற்காக “பட்டன்’ வசதியை ஏற்படுத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணை, அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த “டிராபிக்’ ராமசாமி தாக்கல் செய்த மனுவில், “தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக பிரிவு 49(ஓ) உள்ளது. இவர்கள் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்வதற்காக, “பட்டன்’ வசதியை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய மனுவை பைசல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை அடுத்த வாரத்துக்கு “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *