தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்கள்: தேர்தல் கமிஷன் “மெமோ

posted in: மற்றவை | 0

தேனி: தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன், “மெமோ’ அனுப்பி வருகிறது. தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

ஏப்., 13ல் ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுச்சாவடியில், ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இதற்காக, கல்வித்துறை மூலம் ஆசிரியர்களின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் இந்த உத்தரவை வாங்கவில்லை. பலர் உத்தரவை வாங்கி விட்டு, மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். சிலர், தங்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கக்கோரி, டாக்டர்கள் சான்றுகளுடன் கடிதம் கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் இதே போல் பணிக்கு வர மறுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம்(தனி) தொகுதியில், 120 பேர், கம்பத்தில் 120, போடியில் 133, ஆண்டிபட்டியில், 98 பேர் என, 472 பேர் தேர்தல் பணியை மறுத்துள்ளனர். இவர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் விளக்கம் கேட்டு, “மெமோ’ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணியில் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறோம். இவர்களோ, 1,175 ரூபாய் சம்பளத்துடன் ஒருநாள் தேர்தல் பணியாற்ற, உடல்நிலையை காரணம் காட்டியும், பல்வேறு பிரச்னைகளை கூறியும் மறுக்கின்றனர். இதனால், நாங்கள் வேறு ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது, என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *