சென்னை: சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகம் உள்ள இடத்தில் சாலையில், தேமுதிக நிர்வாகிகளின் கார்களில் திடீரென தேர்தல் அதிகாரிகள், போலீஸார் துணையோடு ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கார்களில் பணம் கொண்டு வரப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக, தேமுதிக இடையே தொகுதிப் பிரிப்பில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இன்று திடீரென தேமுதிக அலுவலகம் முன்பு உள்ள சாலையில் தேர்தல் அதிகாரிகள் தனிப்படை போலீஸாருடன் வந்து அங்கு வந்த கார்களை அதிரடியாக நிறுத்தி சோதனையிட்டனர். தேமுதிக நிர்வாகிகளின் கார்களையும் நிறுத்தி ரெய்டு நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Leave a Reply