விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெ பயப்படுகிறார்-அன்புமணி

posted in: அரசியல் | 0

திருக்கழுக்குன்றம்: போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயப்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து, கல்பாக்கம் அருகே அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

செய்யூரில் போட்டியிடும் பார்வேந்தன் வெற்றி பெற்றால், கருணாநிதி 6 வது முறையாக அரியணை ஏறுவார். நமது கூட்டணி சமத்துவ கூட்டணி, சமூகநீதி கூட்டணி, பலமான கூட்டணி. அதிமுக கூட்டணி சினிமா கூட்டணி, கோடம்பாக்கம் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி.

முதல்முறையாக பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து களம் காண்கிறது. சிங்கமும், சிறுத்தையும் இணைந்த இந்த கூட்டணி, நிச்சயம் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்.

ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் இதுவரை ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. இதற்கு காரணம், போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெயலலிதா பயப்படுகிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *