புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஊழலில் “யுனிடெக்’ நிறுவனம் 2 ஆயிரத்து 342 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளதாக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட 9 பேர் மீதும், 3 நிறுவனங்கள் மீதும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., நேற்று முன்தினம், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. எட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து “யுனிடெக்’ என்ற பெயரில் செயல்படும் நார்வே நாட்டின் “டெலிநார்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து “யுனிநார்’ என்ற பெயரில் வர்த்தகத்தை நடத்தியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் “யுனிடெக் ஒயர்லெஸ்’ நிறுவனம் 2 ஆயிரத்து 342 கோடி ரூபாய் அளவுக்கு பலன் அடைந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும், “யுனிடெக் ஒயர்லெஸ் ‘ நிறுவனக் குழுமத்தில் அசோகா புராஜெக்ட்ஸ் லிமிடெட், நகான் பிராபர்ட்டீஸ் லிமிடெட், யுனிடெக் பில்டர்ஸ் அன்ட் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் இன்ப்ராஸ்டரக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், அசார் பிராபர்ட்டீஸ் லிமிடெட், அடானிஸ் புராஜக்ட் பிரைவேட் லிமிடெட், ஹட்சன் பிராபர்ட்டீஸ் லிமிடெட், மற்றும்வோல்கா பிராபர்ட்டீஸ் லிமிடெட்ஆகியவை அடங்கும். பின்பு அவை ஒன்றிணைக்கப்பட்டன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.தவிரவும் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் என்ன கொள்கையை தகவல் தொடர்பு துறை மேற்கொள்ளப் போகிறது என்ற தகவல் ஸ்வான், மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Leave a Reply