அமெரிக்காவிடம் பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்

posted in: உலகம் | 0

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு கூரியர் கடிதம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வந்த அபுஅகமது அல்- குவைதியுடன் டெலிபோன் பேச்சை ஒட்டுக் கேட்டு பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கா மோப்பம் பிடித்ததாக தகவல் வெளியானது.

தற்போது அது உண்மை இல்லை. பின்லேடன் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தது தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா அப்துல் ஹானிபிராதர் என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இவர் பின்லேடன் நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர். தலிபான் இயக்கத்தை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவராவர். ஆப்கானிஸ்தானில் ரோட்டோரங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருவதில் வல்லவர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அமெரிக்க படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த ரகசிய இடம் பற்றி அவர் அமெரிக்க உளவுத்துறையிடம் தெரிவித்தார்.

இது குறித்து ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அதாவது, தலிபான்கள் அதிகம் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதை அமெரிக்கா ஏற்று அறிவித்தது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலையும், அந்த பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *