தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, அரசு வேலைக்காக, 70 லட்சம் பேர் காத்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பத்தாம் வகுப்பு முதல், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசின் வேலைவாய்ப்பிற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்கின்றனர். இது போன்று, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள், பதிந்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு கல்வி ஆண்டு முடிவிலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது.
70 லட்சம் பேர் காத்திருப்பு: கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கல்வி, சுகாதாரம், உள்ளாட்சித் துறைகளில், 5 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இருப்பினும், அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில், கடந்த மார்ச் 31ம் தேதி வரை, 62 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், பெண்கள் மட்டுமே 29 லட்சம் பேர். மாநில அளவில், 70 லட்சம் பேர் காத்திருக்கும் அதிர்ச்சி தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகமே புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளது. இதில், பொறியியல் பட்டம் பெற்ற ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்கள், 12,449 ; பழங்குடியின பிரிவில், 186 பேர் உள்ளனர்.
அரசு கவனிக்குமா? தமிழகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் கல்வியாளர்களுக்கு அரசு வேலை வழங்க தேவையான நடவடிக்கைகளை புதிய அரசு எடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Leave a Reply