எல்லாவற்றையும் விட மனைவியை நேசித்தவன்” ராஜினாமா செய்த ஐ.எம்.எப்., தலைவர் கவலை

posted in: உலகம் | 0

நியூயார்க்: சர்வதேச நிதியக்குழு ( ஐ.எம்.எப்., ) தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் ராஜினாமா அறிவிப்பின்போது இத்தருணத்தில் தனது மனைவியை நினைத்து பார்க்கிறேன் என்றும் உலகில் உள்ள எல்லாவற்றையும் விட நான் எனது மனைவியை அதிகம் நேசித்தேன் என்றும், இந்தப்புகார் தனக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலை என்றும் பெரும் கவலையுடன் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டோமினிக் ஸ்ட்ராஸ்கான் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார். ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது பணிப்பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்பது குற்றச்சாட்டு. பிரான்ஸ் நாட்டில் உள்ள சோசலிஸ்ட் பார்ட்டியின் தலைவராக இருப்பவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் (வயது 62) . இவர் வருங்காலத்தில் ( 2012 ல் ) பிரான்ஸ் நாட்டின் அதிபராக கூட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இவர் நியூயார்க்கில் ஒரு பிரபல டைம்ஸ் ஸ்கொயர் என்ற ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தநேரத்தில் இவரது அறைக்கு வந்த பணிப்பெண்ணிடம் வலுக்கட்டாயமாக இழுத்து செக்ஸ் தொந்தரவு புரிந்துள்ளார். இந்தப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸ் புறப்பட தயாராக இருந்த போது விமானத்தில் இருந்து இறக்கி போலீசார் கைது செய்தனர். ஜாமின் கிடைக்காத அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது ஐ.எம்.எப்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராஜினாமா கடிததத்துடன் அவர் அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது : நான் ராஜினமா செய்ய தள்ளப்பட்டுள்ளேன். ராஜினாமாவின் இந்த துயரமான தருணத்தில் எனது மனைவியை முதலில் நினைத்து பார்க்கிறேன் . நான் அவர் மீது எல்லாவற்றையும் விட மிகுந்து அன்பு வைத்திருந்தேன், 2 வது எனது குழந்தைகள், குடும்பத்தினர் , நண்பர்கள் என அனைவரையும் நினைந்து கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். செக்ஸ் புகார் தனக்கு எதிராக பின்ப்பட்ட சதி வலை என்றும் தனது மீது குற்றமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *