பெட்ரோல் விலை மீண்டும் புதன்கிழமை உயருகிறது: லிட்டருக்கு ரூ.1.35 அதிகரிக்கும்

posted in: மற்றவை | 0

பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, 4 மாதங்களாக பெட்ரோல் விலைஉயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை புதன்கிழமை மீண்டும் உயர்த்தப்படுகிறது. இத்தகவலை முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள், விலை உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *